இரட்டை நிலை எலும்பு வெட்டு
சாதரணமாக மக்களுக்கு இயற்கையிலேயே முழங்கையிலிருந்து மணிக்கட்டு வரை இருக்ககூடிய பகுதியில் இரண்டு எலும்புகள் ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கும். ஆனால் சில குழந்தைகள் பிறக்கும்போது பல்வேறு குறைபாடுகளால் முழங்கையிலிருந்து மணிக்கட்டு வரை இருக்ககூடிய இரண்டு எலும்புகள் தனித்தனியாக இருப்பதற்கு பதிலாக ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு பிறந்து விடும்.
இது போன்ற குழந்தைகள் மற்ற குழந்தைகள் போலில்லாமல் எழுதுவதற்கும், சாப்பிடுவதற் கும், அன்றாட வேலைகளை செய்வதற்கும் கையை உபயோகபடுத்த முடியாமல் சிரமப்படுவர்.
இதை ஏழு முதல் எட்டு வயதிற்குள்ளாகவே கண்டறிந்து ஆஸ்டியோடமி என்ற அறுவைசிகிச்சை மூலம் சரி செய்து விடலாம்.